இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐ.சி.சி. விருதுக்கு தோனி தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை எனப் புகழாரம் சூட்டிய கில்கிறிஸ்ட், உலகளவில் பார்க்கும் போது சச்சினே சிறந்த பேட்ஸ்மென் எனக் கூறினார்.
இவர்கள் இருவரையும் ஒப்பிடுவது என்பது கடினமான காரியம் என்றாலும், தோனி அதிரடியாக விளையாடக் கூடியவர்; எப்போது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றே கணிக்க முடியாது; அச்சமின்றி விளையாடக் கூடியவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் சச்சின் மிகவும் நிபுணத்துவம் மிக்க ஆட்டக்காரர்; அவர் விளையாடுவதைப் பார்ப்பதே மிக அழகாக இருக்கும். அந்த வகையில் இருவரில் சச்சினே சிறந்தவர் எனக் கூறியுள்ளார்.
டெஸ்ட் கேப்டனாக தோனி?: ஒருநாள் அணியை சிறப்பான பாதைக்கு அழைத்துச் சென்றுள்ள தோனிக்கு டெஸ்ட் அணியின் தலைவர் பதவியை வழங்கலாமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்த விடயத்தில் தற்போது அந்த அவசரமும் தேவையில்லை என பதிலளித்தார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியின் தலைமையை ஏற்பதற்கான தகுதி அவருக்கு இருப்பதால், அதற்கு உகந்த காலம் வரும் வரை காத்திருப்பதே சிறந்த
நினைவேறுகிறது…