பங்களாதேஷ் அரசின் துவக்கப்பள்ளிகளுக்கு இலவச இண்டர்நெட் இணைப்பு வழங்கும் திட்டத்தை ஆதரிக்கும் வகையில், கடலுக்கு அடியில் செல்லும் கேபிள்களுக்கான பேண்ட்வித் கட்டணத்தை அந்நாட்டு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெகுவாகக் குறைத்துள்ளது.
இதனை பங்களாதேஷ் தொலைத்தொடர்பு ஆணைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
பேண்ட்வித் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்து அதிகளவிலான கல்வி நிலையங்கள் இண்டர்நெட்டை உபயோகிக்க வழிவகை செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் கூறினர்.
தகவல் தொழில்நுட்பத்துறை பங்களாதேஷில் எதிர்பார்த்த அளவிற்கு வளர்ச்சியடையவில்லை என்பதால, இண்டர்நெட் கட்டணத்தை குறைக்குமாறு சம்பந்தப்பட்ட சேவை நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக தொலைத்தொடர்பு ஆணையத்தின் தலைவர் மன்சூருல் ஆலம் தெரிவித்துள்ளார்.
மேலும் துவக்கப்பள்ளிகளுக்கு 64கேபிபிஎஸ் திறன் வரை இண்டர்நெட் சேவையை இலவசமாக வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பொதுபல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், மதரஸாக்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு மாதாந்திர கண்டண அடிப்படையில் குறைவான விலையில் இண்டர்நெட் இணைப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நன்றி: எம்எஸ்என்
நினைவேறுகிறது…