Webdunia: Portal - Search - Mail - Greetings   More >>
Support | Font Download | Feedback
Search  
Welcome, Guest  [ Register | Sign In ]

அஜீத்தை இயக்கும் சௌந்தர்யா- ரஜினியின் ஆசிர்வாதத்தோடு புதிய அவதாரம்




கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க சென்றிருக்கிறது பில்லா. கூடவே போயிருக்கிறார் அஜீத்தும். போவதற்கு முன்னால், அஜீத் எடுத்த முடிவுதான் இப்போது கேன்ஸ் பட விழா செய்தியை விட முக்கியமானது.

அதற்கு முன் ஒரு பிளாஷ்பேக். வார்னர் பிரதர்சுடன் இணைந்து பட தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் ரஜினி மகள் சௌந்தர்யா, தனது புதிய பேனரில் நடிக்க அஜீத்திற்கு அட்வான்ஸ் கொடுத்திருக்கிறார். பில்லா படத்தின் பாகம் 2-ஐ தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறது இந்த புதிய கம்பெனி. இதற்காக அஜீத்தின் பில்லாவை இயக்கிய விஷ்ணுவர்த்தனிடம் சம்பளம் பேசினார் சௌந்தர்யா. அவர் கேட்ட சம்பளம் ஐஸ்வர்யாவை கலவரப்படுத்த, வேறு முடிவுக்கு வந்த சௌந்தர்யா அஜீத்தை சந்தித்தாராம்.

தான் இயக்கிய சுல்தான் தி வாரியர் படத்தின் சில காட்சிகளை அவருக்கு திரையிட்டு காண்பித்திருக்கிறார். அவற்றை பார்த்த அஜீத்தும், வாவ்... என்று வியந்து தனது பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சௌந்தர்யா, பில்லா-2 படத்தை இதே விறுவிறுப்போடு நானே இயக்குகிறேன் என்று கூற, உடனடியாக சம்மதித்துவிட்டாராம் அஜீத்.

மகளின் துணிச்சலுக்கு அப்பா ரஜினியின் ஆசிர்வாதமும் கிடைத்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் இந்த படத்தின் கோலாகல அறிவிப்பு முறைப்படி வர இருக்கிறது. உலகின் எல்லா மறுப்புகளும், இன்னொரு துவக்கத்தின் அறிகுறியாகவே இருக்கிறது.

வாம்மா மின்னலு.....
கைதுறப்பு